ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பினர். மீனவர்களின் வலையில் பல வகையான மீன்கள் சிக்கியது. குறிப்பாக முண்டக்கண்ணி எனப்படும் மீன் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் சிக்கியது. ஒரு படகுக்கு 600 கிலோ முதல் 1 டன் வரை மீன் கிடைத்துள்ளது. முண்டக்கண்ணி மீன் அதிகளவு மீன்பாடு கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.